இடுகைகள்

2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முகப்புத்தகத்திலேயே எனது பொழுதுகள்!

படம்
முன்பெல்லாம் புத்தகங்களை வாசிப்ப்தில் எனது பொழுதுகள் கழியும். ஆனால் இப்போதெல்லாம் முகப்புத்தகத்திலேயே எனது பொழுதுகள் மூழ்கிக்கிடக்கின்றது.  Face book த்தான் முகப்புத்தகமென்று குறிப்பிட்டேன். Facebook ற்க்கு தமிழாக்கத்தை கொடுத்த பெருமையும்,உரிமையும் எனக்குத்தான் என்பதில் ஒரு பெருமிதம். இதனை நண்பர் கோமஸ் அண்ணா ஆமோதிக்கின்றார். இந்த புத்தகத்திற்குள் எப்போது நான் மூழ்கினேன் என்பது எனக்கே தெரியாது. இதைக்குறித்து பதிவு எழுதவேண்டுமென்று நினைத்திருந்த போதே நினைத்த பல காரியங்களை பதிவர் சினேகிதி தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இது எனக்கு மட்டுமல்ல பலரது பொழுதுகள் Facebook ஆரம்பித்துFacebook இல் தான் முடிகிறது என்று குறிப்பிடுகிறார்கள். உண்மையில் இன்றைய காலக்கட்டத்தில் பல சமூகத்தொடர்பு தளங்கள் உலாவந்தாலும் முகப்புத்தகம் அதன் வாசகர்களிடத்தில் நல்ல பெயறெடுத்துள்ளது எனலாம். வெறுமனே நம்முடைய படங்களை வெளியிட்டு நண்பர்களின் ஆல்பத்தையும் பார்வையிடுவதற்குமட்டுமல்லாது,எங்கோவிருக்கும் நம் பால்ய சினேகிதர்களை ஒருங்கிணைக்கும் அற்புத தளமாக செயல்படுகிறது . . Facebook இன் வரலாற்றினை பார்ப்போமேயானால் M

ஈச்சம் பழம்!

படம்
வெயிலின் கொடுமை தாங்கமுடியவில்லை! வேலைப்பளுவும் சொல்ல முடியவில்லை! இவற்றைக்காரணம் காட்டி கடந்த ஏப்பிரல் மாதத்திற்குப்பின் எந்த பதிவும் இடவில்லை. மீண்டும் ஒரு மொக்கைப்ப்திவை உங்களிடம் ஒப்புவிக்கிறேன். இவற்றுக்கிடையில் ஜூலைக்கலவரமும் நானும்” எனும் பதிவை மீள்பதிவேற்றினேன். சரி விசயத்திற்கு வருவோம். இந்த பேரீச்சம் பழம் இருக்கிறதே பேரீச்சம் பழம், இது உடலுக்கு நல்லதா என்றால் மிகவும் நல்லது. ரொம்ப பேர் கூடாது என்கிறார்கள்.இப்படி வலம்புரி ஜானைப்போல பேச வரல்லைங்க. பேரீச்சம் மரம் எப்படி இருக்கும்? எப்படி பூக்கும்,காய்க்கும்,பழுக்கும் என்பது அமீரகத்திற்கு வந்த பின்புதான் காணும் வாய்ப்புகிடைத்தது ஈச்சம் பழம்! எங்கள் குடியிருப்பிற்கு பின்புரமாக ஒரு சிறிய மரம் இருந்தது அது கொத்தாக காய்த்திருக்கும் அழகே தனியழகு. என் கமராவில் கிளிக் செய்த அந்த படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

டுபாயில் ஹலோ எஃப்.எம்

படம்
தமிழ்நாட்டில் ஊடகத்துறையில் முன்நிற்கும் நிருவனமான மலர் பப்ளிகேசன் நிருவனத்தின் சார்பில் பல வானொலி நிலையங்கள் இயங்கிவருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களான சென்னை,மதுரை,திருநெல்வேலி,தூத்துக்குடி,கோயம்புத்தூர்,பாண்டிச்சேரி மற்றும் திருச்சி போன்ற நகரங்களில் ஹலோ எஃப்.எம் ஒலித்துவருகின்றது. பல்வேறு தமிழ் பண்பலை வானொலிகளின் வரிசையில் ஹலோ எஃப்.எம் தனெக்கென நேயர்களிடத்தில் ஒரு தனியிடத்தைப்பிடித்துள்ளது. பத்திரிகைத்துறையிலும்,வானொலித்துறையிலும் வெற்றிக்கொடிகட்டிய மலர் பப்ளிகேஷன் நிருவனம் டுபாயிலும் தனது காலடியை எடுத்து வைக்கிறது. 24 மணிநேர தமிழ் வானொலி சேவை துவங்கப்படவுள்ளது என்பது தமிழ் வானொலி நேயர் நெஞ்சங்களுக்கு இனிப்பான செய்தியாகும். அமீரகத்தில் ஏற்கனவே ரேடியோ ஏசியா நிருவனத்துடன் இணைந்து இலங்கை மகாராஜா நிருவனம் சக்தி எப்.எம் வானொலியை நடாத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சக்தி எப்.எம் அண்மையில் தனது சேவையினை ஏ. எம் அலை வரிசைக்கு மாற்றிக்கொண்டது. இந்நிலையில் பண்பலையில் ஹலோ எஃப்.எம் மின் வரவினால் அமீரகத்தில் இரண்டு வானொலிகள் போட்டி போடக்கூடிய ஆரோக்கியமான வாய்ப்பிரு

பழசிராஜா

படம்
அண்மையில் ஓர் மலையாள படத்தினைப்போய்ப் பார்க்கும் படியாக மலையாள நண்பர்கள் என்னை வற்புறுத்தினார்கள். அமீரகத்தில் சக்கைபோடு போடுபோட்டுக்கொண்டிருக்கும் பழசிராஜா படத்தினைதான் அவர்கள் குறிப்பிட்டது. பிரபல மலையாள இயக்குனர் ஹரிஹரனின் இயக்கத்திலும், வாசுதேவன் நாயரின் திரைக்கதை வசனத்திலும், இசைஞானி இளையராஜாவின் இசையிலும் அலங்கரிக்கப்பட்ட ஓர் அற்புதமான படமாகும். பிரபல நடிகர் மம்முட்டி, சரத்குமார்,பத்மபிரியா போன்றோர் இதில் நடித்திருக்கிறார்கள். அமீரகத்திரை அரங்கொன்றில் நானும் படத்தினைக்காண சென்றிருந்தேன். படத்தின் பிரமாண்டமான காட்சிகள் நகர நகர ஒரு புரட்சியின் உத்வேகத்தை கதையும், காட்சியமைப்பும் தந்துகொண்டிருந்தது. வெள்ளையனுக்கு எதிராக கேரளத்தில் போராடிய பழசிராஜா எனும் வீரனது கதையாகும். படம் கேரளத்தில் நடந்த ஓர் சம்பவத்தை சித்தரித்தாலும் எனக்கென்னவோ ஈழத்தில் நடந்த ஓர் இலட்சியப்போராட்டத்தையே என் கண்முன் நிருத்திநிற்கின்றது. புரட்சியையும்,விடுதலையையும் நேசிக்கும் எந்தவொரு மகனுக்கும் இப்படத்தைப்பார்க்கும்போது இரத்தம் சூடாகும். ஒரு சிறுபான்மையினம் தன் இனத்தைக்காத்துக்கொள்ளவும், அதன் விடுதலைக்காக