டுபாயில் ஹலோ எஃப்.எம்







தமிழ்நாட்டில் ஊடகத்துறையில் முன்நிற்கும் நிருவனமான மலர் பப்ளிகேசன் நிருவனத்தின் சார்பில் பல வானொலி நிலையங்கள் இயங்கிவருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களான சென்னை,மதுரை,திருநெல்வேலி,தூத்துக்குடி,கோயம்புத்தூர்,பாண்டிச்சேரி மற்றும் திருச்சி போன்ற நகரங்களில் ஹலோ எஃப்.எம் ஒலித்துவருகின்றது.

பல்வேறு தமிழ் பண்பலை வானொலிகளின் வரிசையில் ஹலோ எஃப்.எம் தனெக்கென நேயர்களிடத்தில் ஒரு தனியிடத்தைப்பிடித்துள்ளது.

பத்திரிகைத்துறையிலும்,வானொலித்துறையிலும் வெற்றிக்கொடிகட்டிய மலர் பப்ளிகேஷன் நிருவனம் டுபாயிலும் தனது காலடியை எடுத்து வைக்கிறது.

24 மணிநேர தமிழ் வானொலி சேவை துவங்கப்படவுள்ளது என்பது தமிழ் வானொலி நேயர் நெஞ்சங்களுக்கு இனிப்பான செய்தியாகும்.

அமீரகத்தில் ஏற்கனவே ரேடியோ ஏசியா நிருவனத்துடன் இணைந்து இலங்கை மகாராஜா நிருவனம் சக்தி எப்.எம் வானொலியை நடாத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி எப்.எம் அண்மையில் தனது சேவையினை ஏ. எம் அலை வரிசைக்கு மாற்றிக்கொண்டது.

இந்நிலையில் பண்பலையில் ஹலோ எஃப்.எம் மின் வரவினால் அமீரகத்தில் இரண்டு வானொலிகள் போட்டி போடக்கூடிய ஆரோக்கியமான வாய்ப்பிருப்பதாக வானொலி அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஹலோ எஃப்.எம் மின் பரீட்சாத்த ஒலிபரப்பு இவ்வருடம் ஜனவரி 14 முதல் பண்பலை 89.5 அலை வரிசைல்யில் புஜைராவில் இருந்து ஒலிபரப்பாகிவருகின்றது.

கூடிய விரைவில் பல்சுவை நிகழ்ச்சிகளுடன் இதன் சேவை அமீரகமெங்கும் ஒலிக்கவிருக்கின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலங்கை சென்றபோது!

ஆங்கிலம் தெரியாத புஸ்பகுமார