முகப்புத்தகத்திலேயே எனது பொழுதுகள்!


முன்பெல்லாம் புத்தகங்களை வாசிப்ப்தில் எனது பொழுதுகள் கழியும். ஆனால் இப்போதெல்லாம் முகப்புத்தகத்திலேயே எனது பொழுதுகள் மூழ்கிக்கிடக்கின்றது.  Face book த்தான் முகப்புத்தகமென்று குறிப்பிட்டேன். Facebook ற்க்கு தமிழாக்கத்தை கொடுத்த பெருமையும்,உரிமையும் எனக்குத்தான் என்பதில் ஒரு பெருமிதம். இதனை நண்பர் கோமஸ் அண்ணா ஆமோதிக்கின்றார். இந்த புத்தகத்திற்குள் எப்போது நான் மூழ்கினேன் என்பது எனக்கே தெரியாது. இதைக்குறித்து பதிவு எழுதவேண்டுமென்று நினைத்திருந்த போதே நினைத்த பல காரியங்களை பதிவர் சினேகிதி தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இது எனக்கு மட்டுமல்ல பலரது பொழுதுகள் Facebook ஆரம்பித்துFacebook இல் தான் முடிகிறது என்று குறிப்பிடுகிறார்கள்.

உண்மையில் இன்றைய காலக்கட்டத்தில் பல சமூகத்தொடர்பு தளங்கள் உலாவந்தாலும் முகப்புத்தகம் அதன் வாசகர்களிடத்தில் நல்ல பெயறெடுத்துள்ளது எனலாம். வெறுமனே நம்முடைய படங்களை வெளியிட்டு நண்பர்களின் ஆல்பத்தையும் பார்வையிடுவதற்குமட்டுமல்லாது,எங்கோவிருக்கும் நம் பால்ய சினேகிதர்களை ஒருங்கிணைக்கும் அற்புத தளமாக செயல்படுகிறது.


. Facebook இன் வரலாற்றினை பார்ப்போமேயானால் Mark Zuckeburd எனும் 25 வயது Harvard பல்கலைக்கழக மாணவன் 2004ம் ஆண்டு மாசி 4ம் திகதி ஒரு செயற்பாட்டிற்காக சக மாணவர்களுடன் சேர்ந்து உருவாக்கிய தளமேFacebook எனும் சமூகத்தொடர்பாடல் வலையமைப்பாகும். சினேகிதி குறிப்பிட்ட்தைப்போல இதில் கோழி வளர்ப்பதும், கத்தரிக்காய் நடுவதும்,பரிசுப்பொருள்கள் தருவதும் எரிச்சலூட்டும் விசயங்களும் அகற்றப்படவேண்டிய விசயங்களுமாகும்.

நான் இப்போ என்ன செய்துகொண்டிருக்கிறேன்,எங்கெல்லாம் போய் வந்தேன் என்பதை உடனுக்குடன் எனது டிஜிடல் கமராவிலோ,கைத்தொலைபேசியின் வாயிலாக சுட்டுத்தள்ளியதை அப்ப்ப்போ சுடச் சுட நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.தொடர்பு முறிந்துபோன எமது நண்பர்களை இந்த தளத்தில் தேடிக்கண்டுபிடிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும். ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்களின் எண்னிக்கையை அத்திகரிப்பதிலேயேசந்தோசப்படுகிறார்கள். ஒரு சில நாடுகளில் இதன் சேவை தடைசெய்யப்பட்டும், பல சிக்கல்கள்,சர்ச்சைகளைச்சந்தித்தாலும் 350 மில்லியன் பாவனையாளர்களைத்தன்னுள் கொண்டுள்ளது.
எப்படி உருவானது என்பதினை சித்தரிக்கும் வண்ணமாக Harvard எனும் திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈச்சம் பழம்!

இலங்கைக்கு கிடைத்த பரிசு

ஜுலை கலவரமும் நானும்