சினிமாவில் பாடும் வாய்ப்பு!

இங்கே அழுத்திப்பாருங்கள் http://www.youtube.com/watch?v=rDWPZudu8u4 எனது உயர்படிப்பிற்காகவும்,சித்தப்பாவின் தொழில் உதவிக்காகவும் சென்னையில் 5வருடங்கள் தங்கியிருந்தபோது ஒரு தமிழ் சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகிட்டியது. அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.சிறுவயதுமுதல் இசையில் இருந்த ஆர்வத்தினாலும், ஒரளவேனும் கேள்விஞானத்தினால் பாடும் திறமையிருந்ததினாலும் என் தாயார் முதல் பலரும் கிடார் பயிலும்படி ஊக்கப்படுத்தினார்கள். என் தாயார் வாங்கித்தந்த கிடார் என்னைவிட அளவில் பெரிதாகவிருந்தமையால் அதன் மீது வெறுப்புவந்து அப்படியே விட்டுவிட்டேன். இளமைக்காலத்தில் மீண்டும் கிடார் மீது மோகம் வந்துவிடவே கொஞ்சம் சிரத்தையாகக்கற்றுக்கொள்ள முடிவுசெய்தேன். அப்போது சென்னை அசோக்நகரில் திரு.கண்ணன் மாஸ்டர் நடாத்திவந்த இசைக்கல்லூரியில் போய்ச்சேர்ந்துகொண்டேன். சீக்கிரம் கற்றுக்கொள்வதற்காய் குறுக்குவழிமுறையை தேர்வு செய்து பயின்று வந்தேன்.அப்போதுதான் எனக்கு அறிமுகமானார் கண்ணன் மாஸ்டரின் ஆரம்பகால மாணவனும், இசையமைப்பாளருமாகிய அக்னி கலைவாணி எனும் துடிப்புள்ள இளைஞரை. அவ்வப்போது பொழுது போக்கிற்காய் சில இசைக்குழுக்களில் நான் பாடிவருவதைக்கண்ட அக்னி என்னை கீபோர்டு வாசிக்கவும் செய்து பாடுவதில் ஊக்கப்படுத்தினார்.இது இப்படியிருக்க "ஜதி" எனும் புது படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்திருபதாகவும், படத்தில் ஓரு பாடலைப்பாடுவதற்கான வாய்ப்பினை எனக்கு தருவதாகவும் கூறினார். உண்மையில் அன்று என் சந்தோசத்திற்கு அளவேயில்லை. சினிமாவில் பாடப்போகிறேன் எனும் சினிமாக்கனவு அன்றுமுதல் தோன்றலாயிற்று.விஷ்வா எனும் பாடலாசிரியர் பாடல்களை எழுதிமுடிக்க அக்னி கலைவாணி இசையமைத்து இசைக்கோர்வை செய்துமுடித்தார். நான் பாடவேண்டிய பாடல் "கவியே கவியென் கவியே" என ஆரம்பமாகும் பாடலது.பாடிப்பாடி பயிற்சி செய்துகொண்டு பாடல் பதிவிற்கு தயாரானேன். படத்தின் பூஜை தினமன்றே அனுராதா ஸ்ரீராமின் பாடலோடு பாடல் பதிவுகள் ஆரம்பமாகின. என்னுடைய ஒலிப்பதிவும் நெருங்கியது. சென்னை வடபழனிப்பகுதியில் அமைந்திருந்த Red Stodio வில் தான் ஒலிப்பதிவு ஆயத்தமாயிருந்தது. ஒலிப்பொறியிளாலராக திரு.கார்லோஷ் கடமையாற்றினார். ஏற்கனவே இலங்கை வானொலி தேசிய சேவையின் யுவயுகம் எனும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காய் கலையகம் நுளைந்திருப்பதாலும், எனது சொந்த தயாரிப்பான கிறிஸ்மஸ் பாடல் ஆல்பம் ஒலிப்பதிவின்போது Meta Studio நுளைந்திருப்பதாலும் சற்று வசதியாகவிருந்தது. முன்னரே இசைச்சேர்க்கை செய்துவைய்க்கப்பட்ட அந்த ஒலிக்கலவை எனது குரலுக்காய் காத்துக்கிடந்தது. முன்பெல்லாம் ஒரு பாடல் பதிவின்போது அத்தனை வாத்தியக்கலைஞர்களும் இசைக்க பாடக,பாடகிகள் அப்போதே பாடிப்பதிவேற்றப்படவேண்டும். இதில் ஒருவர் தவரு விட்டால் கூட ஆரம்பத்திலிருந்து மீண்டும் பாடிப்பதிவு செய்யவேண்டும். இப்போதுள்ள தொழில்நுட்ப்பவசதிகளினால் இந்தக்குறை நிவர்த்திசெய்யப்பட்டுள்ளது. தனித்தனியாக ஒவ்வொரு கலைஞர்களும் அவரவர் நேரவசதிப்படி இசைத்துப்பதிவேற்றலாம். என்னுடைய பாடல் பதிவிலும் அங்கே நிருத்தி, இங்கே வெட்டி, ஒட்டி ஒருவழியாக பாடல் பதிவு நிறைவேறியது.
பாடல் காசட் வெளியீட்டின்போது அங்கே எனது பாடல் இல்லை. மனமுடைந்து போய்விட்டேன். இருப்பினும் படம் முடியும் தருவாயில் அதன் தயாரிப்பாளரும்,ஓளிப்பதிவாளருமான திரு.சித்திரைச்செல்வனும்,இயக்குனர் விஜயராகவனும்(அண்மையில் காலமானார்) என்னைச்சமாதானப்படுத்தி எனது பாடல்தான் படத்தில் (Highlight Song) ஆக வெளிவரவிருப்பதாகவும், பாடல் படத்தின் நாயகி சுஜிதாவிற்குப்பிடித்துப்போக அதை ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னபோது ஆறுதலடைந்தேன்.
படத்தின் முன்னோட்டம் காண்பிக்கப்பட்டபோது நாயகி சுஜிதா என்னை நேரில் வாழ்த்தியபோது அளவற்ற ஆனந்தம். ஒவ்வொரு முயற்சியெனும் படியினிலும் தோல்வியேனும் சறுக்கள்களும் பாராட்டுதலெனும் எழுச்சியும் வாழ்க்கையின் இயல்பேயென அறிந்துகொண்டேன். இது ஒவ்வொரு அறிமுக கலைஞர்களுக்கும் பொருந்தும். http://www.youtube.com/watch?v=rDWPZudu8u4

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈச்சம் பழம்!

இலங்கைக்கு கிடைத்த பரிசு

ஜுலை கலவரமும் நானும்